செவ்வாய், 15 டிசம்பர், 2015
நீர் நிலைகள்
நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே நிலங்களை அழகாக பிரித்து வைத்துள்ளனர். இது வீடு கட்டி வசிக்க உகந்த இடம் , இது விவசாயத்திற்கான இடம் மற்றும் இது நீர் நிலைகள் அமைக்க சரியான இடம் என்று.
நாம் அந்த வரம்புகளை உடைத்து ஏரிகள் மற்றும் விளைநிலங்களில் வீடு கட்டினால் மழைநீர் வீட்டில் நுழையாமல் வேறென்ன செய்யும் ...
மழை பெய்த உடன் நீர் அழகாக ஏரிகளையும் நீர்நிலைகளையும் நிரப்பிவிட்டது. ஏரிகளில் வீடு கட்டினா தண்ணீர் எங்கே போகும். தன் வீட்டை தேடி தானே தண்ணீர் போகும் .
இனி எந்த விடயங்களிலும் இயற்கையையும் நம் முன்னோர்களையும் குறைத்து மதிப்பிடாமல் இருத்தல் நலம்.
பழிக்குப் பழி ....
மனிதன் ஏரிகளையும்
நீர்நிலைகளையும் அழிந்து
தனது வீடாக்கினான்....
பழிக்குப் பழி ....
இது தானோ???
நீர்நிலைகளையும் அழிந்து
தனது வீடாக்கினான்....
பழிக்குப் பழி ....
இது தானோ???
வேதனையும் சோதனையும்
வேதனையும்
சோதனையும்
தமிழ் மக்களுக்கு
நிரந்தரமாகவே
விதிக்கப்பட்டதோ ???
மக்கள் படும் துயரங்களை பார்க்க இயலவில்லை ....
கண்கள் குளமாக நெஞ்சம் பட படக்கிறது...
இயற்கையே போதும் ..
இதற்கு மேல் தாங்க எங்களுக்கு சக்தி இல்லை ...
சோதனையும்
தமிழ் மக்களுக்கு
நிரந்தரமாகவே
விதிக்கப்பட்டதோ ???
மக்கள் படும் துயரங்களை பார்க்க இயலவில்லை ....
கண்கள் குளமாக நெஞ்சம் பட படக்கிறது...
இயற்கையே போதும் ..
இதற்கு மேல் தாங்க எங்களுக்கு சக்தி இல்லை ...
Be ready for everything..
Be ready for everything..
நடைமுறை படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான குறிப்புகள்:
1. வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் சிறிய அளவு பணம் எப்போதும் கைவசம் இருக்க வேண்டும் .
2. குறிப்பிட சிலரது தொலைபேசி எண்கள் நினைவில் பதிய வைத்தல் வேண்டும் .
3. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட சிறிய புத்தகம் ஒன்று கையில் வைத்திருக்க வேண்டும் .
4. எமர்ஜன்சி விளக்கு, டார்சன் லைட் மற்றும் மெழுகுவர்த்தி வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
5. முக்கிய ஆவணங்களின் நகல்கள் தூரத்தில் இருக்கும் உறவினர்கள் வீட்டில் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . அவற்றை ஸ்கேன் செய்து மெயில் அட்டாச் செய்து வைக்க வேண்டும் .
6. மொபைல் போன்களில் பேலன்ஸ் எப்போதும் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாமல் மொபைல் சார்ஜ் செய்ய சிறிய பேட்டரிகள் வாங்கி வைக்கவும் .
7. ஒரு வீட்டில் மூன்று நான்கு நெட்வொர்க் சிம் பயன்படுத்தலாம் .
8. அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி உள்ளிட்ட பொருட்கள் ஒரு வாரத்திற்கு தேவையான அளவு வீட்டில் இருப்பு வைத்திருக்க வேண்டும் .
9. அத்தியாவசிய மருந்துகள் எப்போதும் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் .
10. வீட்டில் உள்ள அனைவரும் அவசரநிலை வந்தால் எப்படி எதிர்கொள்வது என முன்பே பேசி வைத்தால் அவசரகாலத்தில் வீண் பதட்டம் குறையும் .
திங்கள், 14 டிசம்பர், 2015
சனி, 26 செப்டம்பர், 2015
வெள்ளி, 25 செப்டம்பர், 2015
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ..
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ...
விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது.
பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது.
பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது.
மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.
அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர்.
தமிழகத்தில் இவ்விழா பெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.
ஞாயிறு, 13 செப்டம்பர், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)