சனி, 23 மே, 2015
புதன், 20 மே, 2015
மே 18
என் அப்பாவி தமிழர் பலர்
படுகொலை செய்யப்பட்ட
போதும் போரில் வீர மரணம்
அடைந்த போதும் ஏற்பட்ட
வலியும் காயமும் என்றும்
என் நெஞ்சை விட்டு
நீங்காது நிற்கின்றது....
படுகொலை செய்யப்பட்ட
போதும் போரில் வீர மரணம்
அடைந்த போதும் ஏற்பட்ட
வலியும் காயமும் என்றும்
என் நெஞ்சை விட்டு
நீங்காது நிற்கின்றது....
அவர்கள் அனைவரும்
என் தோழரே...
ஒவ்வொரு இலங்கை
தமிழனும் என் உறவே...
என் உடன் பிறப்பே....
என் தோழரே...
ஒவ்வொரு இலங்கை
தமிழனும் என் உறவே...
என் உடன் பிறப்பே....
இன்றும் எனக்கு பாசம்
அதிகம் தான் என் இலங்கை
உறவுகளுடன் ...
அவர்கள் வலி என் வலியே..
நானும் உணர்கிறேன்
அந்த வலியை இன்று வரை
உணர்வேன் இந்த வலியை
என் வாழ்நாள் முடியும் வரை ...
உறவுகளுடன் ...
அவர்கள் வலி என் வலியே..
நானும் உணர்கிறேன்
அந்த வலியை இன்று வரை
உணர்வேன் இந்த வலியை
என் வாழ்நாள் முடியும் வரை ...
இந்த நாள் நான் பிரிந்த என்
சொந்தங்களையும் அவர்கள்
உறவுகளையும் நினைத்து பார்த்து
அவர்களுக்காக இறைவனை
வேண்டிக்கொள்கின்றேன்
கண்ணீர் உடன்....
சொந்தங்களையும் அவர்கள்
உறவுகளையும் நினைத்து பார்த்து
அவர்களுக்காக இறைவனை
வேண்டிக்கொள்கின்றேன்
கண்ணீர் உடன்....
ஞாயிறு, 17 மே, 2015
கல்லூரி
கலர் கலர்
கனவுகள்
எதிர்பார்ப்புகள்
ஆசைகளுடன்
தன் இலக்கை
நோக்கி நாம்
நம் முதல் அடி
வைக்கும் இடம்..
சீனியருக்கு பயந்து
பின்வாசல் வழி
நடப்பதும்
தலை நிமிராத
தளிர் நடையும்!!!
சின்னஞ்சிறு
புன்னகையுன் கூடிய
இரு இதழ்களும்
மௌன மொழியும்
என தொடரும்
வரவேற்பு நாள்
விருந்து வரை
சாதி மத நிற
பேதங்களை
கடந்த உலகம்
உயிர் நட்பு!!
அனைவருக்கும்
அமையும் இடம்...
கவலைகள் இல்லா
துள்ளித் திரியும் பருவம்
அரும்பு மீசையும்
குறும்பு காதல் என
முதல் காதல்!!!
துளிர்க்கும் இடம்..
மர நிழலில் அமர்வதும்
கேண்டீனில் அமர்வதும்
தான் மிக மிக அதிகம்
நம் வகுப்பறையின்
வாசத்தை விட !!!!!
கட்டடிப்பதும்
கடற்கரைக்கு செல்வதும்
திரையரங்கு செல்வதும்
கட்டி உருண்டு
சண்டை பிடிப்பதும்
அடுத்த நொடியே
கட்டிப்பிடித்து
அன்பை பொழிவதும்
இங்கு மட்டுமே
நடக்கும் புரியாத புதிர்!!
பிறந்த நாள்
கொண்டாட்டம்
அன்பளிப்பு .....
என மறக்கமுடியாத
இனிய நினைவுகளை
அள்ளித்தரும் இடம்..
ஓர் ஆண்டு படிப்பை
ஒரு நாளில் படித்து
தேர்வு எழுதி
அழகாக நாம்
வெற்றி பெறும் இடம்...
உலகத்தை நாம் பார்க்க
உலகமே நம்மை திரும்பி
பார்க்க வைத்த இடம் ....
இதுவே என் பசுமை மாறா
என் இனிய கல்லூரி ...
மேலே உள்ள அனைத்தும் கற்பனையே ..
என் வாழ்க்கைக்கும் இதற்கும் 90% தொடர்பு கிடையாது ....
என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்
என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்
புதன், 13 மே, 2015
சனி, 9 மே, 2015
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்
அ என்ற உயிர்
ம் என்ற மெய்
மா என்ற உயிர்மெய்
மூன்றும் சேர்ந்த
என் செம்மொழி அவள்..
என்றென்றும்
இனிமையான
இளமையான
பாச மலர்
ஈடு இணை இல்லா
நடமாடும் தெய்வம்...
அவளே என் தாய்....
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். ... உலகில் உள்ளஅனைவரின் அன்னையர்களுக்கும் என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..
என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்
பாதுகாப்பான வாழ்க்கை
வணக்கம் என் இனிய சகோ....
இப்பதிவை நான் இரண்டு நாட்களுக்கு முன்பு போட வேண்டி பதிவு ....
நான் கோவில் சென்ற போது என் உள் ஏற்பட்ட பாதிப்பு ....மகிழ்ச்சி ஆக இருந்தேன் சாமி தரிசனம் முடித்து ...ஒரு ஐந்து நிமிடங்கள் முன்னதாக நான் கோவிலை விட்டு கிளம்பி இருந்தால் நிச்சயமாக இந்த அவலம் என் கண்களில் பட்டு என் உள் பேர் இடியை இறக்கி இருக்காது .
தமிழக அரசின் அன்னதான திட்டத்தை நான் இது வரை சந்தோஷமாக வரவேற்தில்லை. காரணம் உழைக்கும் சிலரையும் சோம்பேறி ஆக்குகிறது என்ற எண்ணம்.அன்று நான் கண்ட காட்சி 100 பேர் என் கண் முன் மாண்டு போன வலியை கொடுத்தது.
அன்னதானம் தொடங்கும் நேரத்தில் மக்கள் தடுப்புகளை தாண்டி ஏரி வரிசையில் நிற்க தொடங்கினார்கள்.அப்போது ஒரு தாய் ....85 வயதுக்கு மேல் இருக்கும் ...
உடல் தளர்ந்து ...நடை தளர்ந்து ...வயதின் முதிர்ச்சி உடலின் கோடுகளாய்....உடல் நடுங்குகின்றது அந்த தாய்க்கு ...நடக்கவும் முடியாமல் அந்த வரிசையில் வந்து நின்றார் ...அந்த கொடிய தருணத்தை காணும் அவஸ்தை இனி என் வாழ்க்கையில் மீண்டும் ஏற்படக்கூடாது ....அய்யகோ நான் துடித்து விட்டேன் ....அந்த நிமிடம் என்னால் என் கண்கள் & இதயத்தில் வழிந்ததை நீரை கட்டுபடுத்த முடியவில்லை .
குடும்பம் கைவிட்ட நிலையில் தனியாக இருக்கும் இது போன்ற வயதானவர்ககளுக்கு அரசு இருப்பிடம் அமைத்து கொடுத்து உணவு கொடுத்து அவர்களை பாதுகாப்பான வாழ்க்கை வாழ வைக்க வழி செய்தால் நன்றாக இருக்கும்.அது போல இருப்பிடங்களை மக்கள் எளிதாக அறிந்து கொண்டு தான் பார்க்கும் ஆதரவற்றோரை அந்த இடங்களில் கொண்டு சேர்த்தால் மட்டுமே இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் .....
வியாழன், 7 மே, 2015
செவ்வாய், 5 மே, 2015
ஞாயிறு, 3 மே, 2015
மழை
கொஞ்சம் கருணை காட்டு
சில்லென்ற மழைத்துளியே
கொஞ்சம் கருணை காட்டு!!
கொடிய வெப்பம் தவிர்க்க
பூமி அன்னை மடி குளிர
செடி கொடிகள் தழைக்க
பலன் பல தரும் மரங்கள் சிரிக்க
உயிர்களின் தாகம் தீர்க்கும்
ஏரி குளம் ஆறுகள் நிரைய
வறட்சி போக்கி வளம் கொடுக்க
விவசாயிகளின் துயர் போக்க
ஆங்காங்கே மிதமானது
முதல் பலத்த மழை பெய்து
மக்கள் முதல் மாக்கள் வரை
உலகின் அனைத்து உயிர்களின்
மனங்கள் குளிர்ந்து உன்னை
வாழ்த்த ஓடோடி வந்துவிடு
விண்ணை விட்டு மண்ணுக்கு
என் செல்ல மழையே!!!
என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்
சனி, 2 மே, 2015
உண்மை இல்லை
காதலிலும் உண்மை இல்லை
உறவிலும் உண்மை இல்லை
உணர்விலும் உண்மை இல்லை
பாசத்திலும் உண்மை இல்லை
வேஷத்திலும் உண்மை இல்லை
அன்பிலும் உண்மை இல்லை
வெறுப்பிலும் உண்மை இல்லை
கோவத்திலும் உண்மை இல்லை
குணத்திலும் உண்மை இல்லை
உன்னிடம் உண்மை இல்லை
என்னிடம் உண்மை இல்லை
உலகிலும் உண்மை இல்லை
இல்லவே இல்லை ....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)