செவ்வாய், 15 டிசம்பர், 2015

ஊஞ்சல்‬


சின்னஞ்சிறு குழந்தைகள்
விரும்பும் ஆசனம்!

சிறியவர் முதல் பெரியவர் வரை
மகிழ்ச்சியை அள்ளித்தரும்
சிம்மாசனம் !!

அவர் அவர் வசதிக்கேற்ப
வாங்கக்கூடிய ஆசனம்

தாய் மடியின் சுகத்தை தந்து
நம்மை தாலாட்டும் ஆசனம்

தோழனாக தோல்விகளில்
தோல் கொடுக்கும் ஆசனம்

துவண்டு இருந்தால்
தலை கோதி துயர் போக்கும்
ஆசனம் !!!

இன்றைய உலகம் ....


ஒரு கூட்டுக்குள்
அடைபட்ட
சிறு பறவையை

பறக்க பழக்கி,
பறக்க தெரிந்து
பறந்து மகிழும்
வேளையில்

சிறகுகளை
வெட்டி
விளையாடுவதே
இன்றைய உலகம் ....

நண்பன்


நடக்க இயலா
தூரத்தை
நான் கடப்பேன்
நீ என் உடன் இருந்தால்
நட்பையும் உயிராக
நான் மதிப்பேன்
நீ நண்பனாக
என் உடன் இருந்தால் ..

வேலை


எதை பழித்தாலும் பழி
ஆனால்
எவ்வளவு கடினமாக
இருந்தாலும்,
சோறு போடும்
வேலையை மட்டும்
பழிக்காதே...

ஒரே மொழி..


உலகில்
அன்பும்
காதலும்
மட்டுமே
அனைத்து
உயிர்களும்
உணரக்கூடிய
ஒரே மொழி..

என் அழகு வெண் நிலவே!!!


நான் எவ்வளவு தூரம்
பயணித்தாலும்
என்னை
பின் தொடர்ந்து
என்னுடனேயே
வருகிறாயே
என் அழகு
வெண் நிலவே!!!
என் மேல் அப்படி
என்னடி காதல் உனக்கு !!!!

தமிழாக நீ இருக்க


தமிழாக நீ இருக்க - அதன்
இனிமையாக நான் இருக்க
மலராக நீ இருக்க - அதன்
வாசமாக நான் இருக்க
கவிதையாக நீ இருக்க - அதன்
வரிகளாக நான் இருக்க
இணை பிரியாமல்
இணைந்தே இருப்போம்
இருவரும் இறுதிவரை....

சிலர் பலர்


சிலர் சில வார்த்தை பேசினாலும்
ரசிக்க தோன்றும்
பலர் பல வார்த்தை பேசினாலும்
வெறுக்கத் தோன்றும்

யோசி


முடிவெடுக்கும் முன்
ஆயிரம் முறை யோசி ...
முடிவெடுத்த பின்
ஒரு நொடி கூட
தாமதிக்காதே!!!

இன்றைய காதல்!!!


மழைக்கு பின்
முளைத்த காளானாக
இன்றைய காதல்!!!
முளைப்பதும் தெரிவதில்லை !!
மடிவதும் தெரிவதில்லை!!

தேடல்


இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடத்தில் தேடி
இருப்பதையும் தினம் தினம்
இழந்து கொண்டே
இருக்கின்றோம் ....

இவ்வுலகம்


பலநூறு அடி முன்னேறினாலும்
கண்டு கொள்ளாத இவ்வுலகம்
ஒரு அடி சறுக்கினாலும்
கை தட்டி சிரிக்க தவறுவதில்லை
எதையும் காதில் போடாமல்
நம் வழியில் பயணிப்பதே நல்லது .

வாழ்க்கை!!


நமது பிறப்பிற்கும்
இறப்பிற்கும்
இடைப்பட்ட
அழகிய
சிறிய பயணமே
நமது வாழ்க்கை!!

வாய்ப்பு வாழ்க்கை


எளியதை அரியதாக நினைத்து
அடி ஏதும் எடுத்து வைக்காமல்
வாய்ப்புகளையும் வாழ்க்கையையும்
இழந்து கொண்டே இருக்கின்றோம் ...

இன்று நேற்று நாளை


நேற்று என்பது முடிந்த கதை
நாளை என்பது தொடர் கதை
இன்று என்பது நிஜ வாழ்க்கை
இவை அனைத்தும் நம் கையில்
நம் தன்னம்பிக்கையில் ..

தன்னம்பிக்கை


இறைவன் தந்ததோ
இயற்கை தந்ததோ
தடைகள் என்று ஏதும் இல்லை
தன்னம்பிக்கை தடைகளை
தகர்த்து எரியும் கை...

இளம் பிஞ்சு ...


காதல் காற்றோடு போனது
திருமணம் தீயோடு போனது
வாரிசோ வழியின்றி வீதியில்!!
விளங்காத புதிராக
புழுகி நிற்கிறது இளம் பிஞ்சு ...

முட்டாள் தனமே!!!


சில முட்டாள்களின்
முட்டாள் தனமான செயலினால்
நாம் வேதனைப்படுவோமானால்
அது நமது முட்டாள் தனமே!!!

ஆசை


கவிதை தமிழில் உன்னைப் பாட ஆசை
கண் இரண்டால் உன்னை ரசிக்க ஆசை

கரம் கோர்த்து மழையில் நடக்க ஆசை
கவலை மறந்து உன் தோள் சாய ஆசை

கடற்கரையில் விளையாட ஆசை
கரம் பற்றி மஞ்சள் கயிறு சூட ஆசை

காத்திருக்கும் என் ஆசைகள் என்றென்றும்
காலமும் நேரமும் நம் கை கூடும் வரை ...

நீர் நிலைகள்


நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே நிலங்களை அழகாக பிரித்து வைத்துள்ளனர். இது வீடு கட்டி வசிக்க உகந்த இடம் , இது விவசாயத்திற்கான இடம் மற்றும் இது நீர் நிலைகள் அமைக்க சரியான இடம் என்று.

நாம் அந்த வரம்புகளை உடைத்து ஏரிகள் மற்றும் விளைநிலங்களில் வீடு கட்டினால் மழைநீர் வீட்டில் நுழையாமல் வேறென்ன செய்யும் ...

மழை பெய்த உடன் நீர் அழகாக ஏரிகளையும் நீர்நிலைகளையும் நிரப்பிவிட்டது. ஏரிகளில் வீடு கட்டினா தண்ணீர் எங்கே போகும். தன் வீட்டை தேடி தானே தண்ணீர் போகும் .

இனி எந்த விடயங்களிலும் இயற்கையையும் நம் முன்னோர்களையும் குறைத்து மதிப்பிடாமல் இருத்தல் நலம்.

மௌனம்


நாம் கோவப்பட வேண்டும்
என்பதற்காகவே
உதிர்க்கப்படும்
வார்த்தைகளுக்கு
பதில் பேசுவதைவிட
சிறந்தது மௌனம் ....

வாழ்க்கை சரித்திரம் ...


எப்படி பிறந்தோம் எப்படி வளர்ந்தோம்
என்பதை விட
எப்படி வாழ்ந்தோம்
என்ன நன்மைகள் செய்தோம்
என்பதே நம் வாழ்க்கையின் சரித்திரம் ...

ஒரு தனி உயிரே!!


உங்கள் வாரிசாக இருந்தாலும்
அதுவும் வேறு ஒரு தனி உயிரே!!
அது உங்கள் பிம்பமாக இருக்க
வேண்டிய அவசியம் இல்லை....

போலி உறவுகள் !!!


இல்லாத ஒன்றை இருப்பதாக
நினைத்து நினைத்து
உயிராக இருக்கும் உயிரை
உதாசீனப்படுத்துவதே
இன்றைய போலி உறவுகள் !!!

காதல் கவிதை


காதல் என்ற கவிதை
காற்றில் மணம் வீசி
கனவில் உருவான என்
கற்பனை காதலனின்
கவித்துவமான
கவின் மிகு
காவிய முகம்
கவர்ந்திழுத்து என்னை
கவி பாட செய்கிறது நம்
கன்னித்தமிழில்!!!

கொட்டும் மழையே


கொட்டும் மழையே
கொஞ்சும் மழையே
கொதித்தது ஏனோ?
கொட்டித் தீர்ப்பதும் ஏனோ?

கொட்டும் அருவியாய்
கொட்டி கொட்டி
கொடு கொடு என்றவர்கள்
கொடுத்தது போதும் போதும் என

கெஞ்சும் அளவிற்கு
கொடுத்தும் தீரவில்லை உன்
கொடைத் தன்மை....

தொலைந்து போன காதல்


தொடும் தூரத்தில் நீ இருந்தும்
தொலைதூரத்தில் இருப்பதாக உணர்கிறேன்
தொலைந்து போன உன் காதலால் ...

பழிக்குப் பழி ....

மனிதன் ஏரிகளையும்
நீர்நிலைகளையும் அழிந்து
தனது வீடாக்கினான்....
பழிக்குப் பழி ....
இது தானோ???

வேதனையும் சோதனையும்

வேதனையும்
சோதனையும்
தமிழ் மக்களுக்கு
நிரந்தரமாகவே
விதிக்கப்பட்டதோ ???

மக்கள் படும் துயரங்களை பார்க்க இயலவில்லை ....
கண்கள் குளமாக நெஞ்சம் பட படக்கிறது...
இயற்கையே போதும் ..
இதற்கு மேல் தாங்க எங்களுக்கு சக்தி இல்லை ...

வரலாறு காணாத மழை


வரலாறு காணாத வரட்சி
வரலாறு காணாத மழை
ஒன்று சேர்த்தது மக்களை
எந்த வித பாகுபாடின்றி
பல உயிர்களை பலிவாங்கி ...

Be ready for everything..


Be ready for everything..
நடைமுறை படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான குறிப்புகள்:
1. வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் சிறிய அளவு பணம் எப்போதும் கைவசம் இருக்க வேண்டும் .
2. குறிப்பிட சிலரது தொலைபேசி எண்கள் நினைவில் பதிய வைத்தல் வேண்டும் .
3. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட சிறிய புத்தகம் ஒன்று கையில் வைத்திருக்க வேண்டும் .
4. எமர்ஜன்சி விளக்கு, டார்சன் லைட் மற்றும் மெழுகுவர்த்தி வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
5. முக்கிய ஆவணங்களின் நகல்கள் தூரத்தில் இருக்கும் உறவினர்கள் வீட்டில் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . அவற்றை ஸ்கேன் செய்து மெயில் அட்டாச் செய்து வைக்க வேண்டும் .
6. மொபைல் போன்களில் பேலன்ஸ் எப்போதும் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாமல் மொபைல் சார்ஜ் செய்ய சிறிய பேட்டரிகள் வாங்கி வைக்கவும் .
7. ஒரு வீட்டில் மூன்று நான்கு நெட்வொர்க் சிம் பயன்படுத்தலாம் .
8. அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி உள்ளிட்ட பொருட்கள் ஒரு வாரத்திற்கு தேவையான அளவு வீட்டில் இருப்பு வைத்திருக்க வேண்டும் .
9. அத்தியாவசிய மருந்துகள் எப்போதும் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் .
10. வீட்டில் உள்ள அனைவரும் அவசரநிலை வந்தால் எப்படி எதிர்கொள்வது என முன்பே பேசி வைத்தால் அவசரகாலத்தில் வீண் பதட்டம் குறையும் .

காற்றழுத்த தாழ்வு நிலை

பொறுத்துப் பொறுத்து பார்த்த நிலம்
பெறும் காற்றழுத்த தாழ்வு நிலையாக
ஆகாயத்தில் நிலை கொண்டு
பொங்கி வரும் வெள்ள நீரினால்
மனித நேயத்தை நெருப்பாக மலரச்செய்தது..

திங்கள், 14 டிசம்பர், 2015

மாமனிதரே

உழைக்க கை இருந்தும்
உழைக்கத் தயங்குபவர்கள் மத்தியில்
உடலின் குறையை உதரிவிட்டு
உழைக்கும் இந்த மனிதர் மாமனிதரே.....

காதல் கோட்டை


மன்மதனே கூட
மங்கையின் மனதில்
காதல் கோட்டை
கட்டுவது
கடினமே!!!

ஆனால் ,
ஒரு முறை
கட்டிவிட்டால்
கலைக்கவே
இயலாத காதல்
கோட்டை அது!!!