ஞாயிறு, 17 மே, 2015

நிலவுப் பெண்ணே


அடி நிலவுப் பெண்ணே
எனக்கும் ஆசை தான்
முழுமையாக உன்னை
ஒருமுறை ஏனும் நான்
வர்ணிக்கவேண்டும் என்று ...

ஒவ்வொரு முறையும் நான்
தோற்றுத்தான் போகிறேன்
உன்னிடம்...

உன் அழகை முழுமையாக
வர்ணிக்க முடியாமல்....

நண்பர்களே நீங்கள் முயற்சி செய்யுங்களேன்....

காலை வணக்கம்



நம் மனதிற்கு
மிகவும் பிடித்தவர்கள்
காலை வணக்கம்
சொல்லாத போது தான்
தெரிகிறது அதன்
வலியும் வேதனையும்...

நம்மை பிடித்தவர்களுக்கு
நாம் சொல்லாத
போது தெரிவதில்லை
அந்த வலி... ..

இனிய காலை வணக்கம் நண்பர்களே....

புதன், 13 மே, 2015

காதல் கடிதங்கள்!!




நிலவுப் பெண்
கசக்கி எரிந்த

காதல்
கடிதங்கள்!!

அழகாக
மின்னுகின்றன!!

வான் முழுதும்
நட்சத்திரங்களாக.....

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

நம் அன்பினால்




விண்ணுக்கும்
மண்ணுக்கும்
உள்ள தூரத்தில்
நாம்
இருந்தாலும்!!!
கண்களுக்கும்
இமைகளுக்கும்
உள்ள நெருக்கத்தை
நான்
உணர்கிறேன்
நம் அன்பினால்...


என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

சனி, 9 மே, 2015

என் காதல் உன் காலடியில்


விலையில்லா பொருள் போல
மதிப்பில்லா பொருளானது
என் காதலும் உன் காலடியில்....

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்


அம்மா!!!
அ என்ற உயிர்
ம் என்ற மெய்
மா என்ற உயிர்மெய்
மூன்றும் சேர்ந்த
என் செம்மொழி அவள்..

என்றென்றும்
இனிமையான
இளமையான
பாச மலர்
ஈடு இணை இல்லா
நடமாடும் தெய்வம்...
அவளே என் தாய்....

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். ... உலகில் உள்ளஅனைவரின் அன்னையர்களுக்கும் என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

பாதுகாப்பான வாழ்க்கை



வணக்கம் என் இனிய சகோ....

இப்பதிவை நான் இரண்டு நாட்களுக்கு முன்பு போட வேண்டி பதிவு ....

நான் கோவில் சென்ற போது என் உள் ஏற்பட்ட பாதிப்பு ....மகிழ்ச்சி ஆக இருந்தேன் சாமி தரிசனம் முடித்து ...ஒரு ஐந்து நிமிடங்கள் முன்னதாக நான் கோவிலை விட்டு கிளம்பி இருந்தால் நிச்சயமாக இந்த அவலம் என் கண்களில் பட்டு என் உள் பேர் இடியை இறக்கி இருக்காது .

தமிழக அரசின் அன்னதான திட்டத்தை நான் இது வரை சந்தோஷமாக வரவேற்தில்லை. காரணம் உழைக்கும் சிலரையும் சோம்பேறி ஆக்குகிறது என்ற எண்ணம்.அன்று நான் கண்ட காட்சி 100 பேர் என் கண் முன் மாண்டு போன வலியை கொடுத்தது.

அன்னதானம் தொடங்கும் நேரத்தில் மக்கள் தடுப்புகளை தாண்டி ஏரி வரிசையில் நிற்க தொடங்கினார்கள்.அப்போது ஒரு தாய் ....85 வயதுக்கு மேல் இருக்கும் ...

உடல் தளர்ந்து ...நடை தளர்ந்து ...வயதின் முதிர்ச்சி உடலின் கோடுகளாய்....உடல் நடுங்குகின்றது அந்த தாய்க்கு ...நடக்கவும் முடியாமல் அந்த வரிசையில் வந்து நின்றார் ...அந்த கொடிய தருணத்தை காணும் அவஸ்தை இனி என் வாழ்க்கையில் மீண்டும் ஏற்படக்கூடாது ....அய்யகோ நான் துடித்து விட்டேன் ....அந்த நிமிடம் என்னால் என் கண்கள் & இதயத்தில் வழிந்ததை நீரை கட்டுபடுத்த முடியவில்லை .

குடும்பம் கைவிட்ட நிலையில் தனியாக இருக்கும் இது போன்ற வயதானவர்ககளுக்கு அரசு இருப்பிடம் அமைத்து கொடுத்து உணவு கொடுத்து அவர்களை பாதுகாப்பான வாழ்க்கை வாழ வைக்க வழி செய்தால் நன்றாக இருக்கும்.அது போல இருப்பிடங்களை மக்கள் எளிதாக அறிந்து கொண்டு தான் பார்க்கும் ஆதரவற்றோரை அந்த இடங்களில் கொண்டு சேர்த்தால் மட்டுமே இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் .....