புதன், 20 மே, 2015

மே 18


தமிழன் நான் தமிழன்
என்று மார்தட்டிக்
கொண்டால் போதாது
உணர்வு வேண்டும்
பாசம் வேண்டும் ...

என் அப்பாவி தமிழர் பலர்
படுகொலை செய்யப்பட்ட
போதும் போரில் வீர மரணம்
அடைந்த போதும் ஏற்பட்ட
வலியும் காயமும் என்றும்
என் நெஞ்சை விட்டு
நீங்காது நிற்கின்றது....

அவர்கள் அனைவரும்
என் தோழரே...
ஒவ்வொரு இலங்கை
தமிழனும் என் உறவே...
என் உடன் பிறப்பே....

இன்றும் எனக்கு பாசம் 
அதிகம் தான் என் இலங்கை
உறவுகளுடன் ...
அவர்கள் வலி என் வலியே..
நானும் உணர்கிறேன்
அந்த வலியை இன்று வரை
உணர்வேன் இந்த வலியை
என் வாழ்நாள் முடியும் வரை ...

இந்த நாள் நான் பிரிந்த என்
சொந்தங்களையும் அவர்கள்
உறவுகளையும் நினைத்து பார்த்து
அவர்களுக்காக இறைவனை
வேண்டிக்கொள்கின்றேன்
கண்ணீர் உடன்....

அன்பு பிச்சை


என்னை ஏளனமாக 
மட்டும் பார்த்து விடாதே
உன் அன்பை 
நான் பிச்சையாக
கேட்கிறேன் 
என்பதற்காக....

ஞாயிறு, 17 மே, 2015

இனிய காலை வணக்கம்


காலை கதிரவன் துள்ளி எழுந்து
வெண்மேகமும் நீலமேகமும்
ஓட்டப்பந்தயம் நடத்தி
வீசும் தென்றல் காற்று
உன்னை வருடி எழுப்புகிறது
நான் உனக்கு இனிய காலை வணக்கம் சொல்ல...

இனிய காலை வணக்கம் நண்பர்களே....

காதலன்



நீராகி என்னை
அடித்து சென்றவனே

நிலமாகி என்னை
உன் இதயத்தில்
புதைத்தவனே

தென்றலாகி என்னை
மெதுவாக வருடியவனே

வானாகி என்னை உன்
பக்கம் வலைத்தவனே

தீயான உன் காதலால்
என் தனிமையை
சுட்டெரித்தவனே

இனி நீ இன்றி
நான் இல்லை....
உன் நினைப்பின்றி
என் வாழ்வும் இல்லை...

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

அன்பு




புரிந்துகொள்ள
முடியாதவர்கள்
மீது அன்பை
மழை போல
பொழிந்தாலும்
அதற்கு மதிப்பு
என்னவோ
சுழியம் தான்...

மிஞ்சி நிற்பது
வலிகளும்
வேதனைகளும்
தான்...

உங்கள் அன்பை இனி
புரிந்துகொள்பவர்களுக்கும்
புரிந்துகொள்ள
முயற்சிப்பவர்களுக்கு
மட்டுமே காட்டுங்கள்
அதன் மதிப்பு
அவர்களுக்கு
மட்டுமே தெரியும் ....


வாழ்க்கை


வயதும்
வாழ்க்கையும்
கடந்து விட்டால்
திரும்ப வராது
ரசித்து விடு
வாழும் போதே...

வலிகளை
மட்டும்
கொடுத்துவிடாதே...
உன்னை மட்டும்
அதிகமாக
விரும்பும்
இதயங்களுக்கு...

கல்லூரி


கலர் கலர்
கனவுகள்
எதிர்பார்ப்புகள்
ஆசைகளுடன்
தன் இலக்கை
நோக்கி நாம்
நம் முதல் அடி
வைக்கும் இடம்..

சீனியருக்கு பயந்து
பின்வாசல் வழி
நடப்பதும்
தலை நிமிராத
தளிர் நடையும்!!!

சின்னஞ்சிறு
புன்னகையுன் கூடிய
இரு இதழ்களும்
மௌன மொழியும்
என தொடரும்
வரவேற்பு நாள்
விருந்து வரை

சாதி மத நிற
பேதங்களை
கடந்த உலகம்
உயிர் நட்பு!!
அனைவருக்கும்
அமையும் இடம்...

கவலைகள் இல்லா
துள்ளித் திரியும் பருவம்
அரும்பு மீசையும்
குறும்பு காதல் என
முதல் காதல்!!!
துளிர்க்கும் இடம்..

மர நிழலில் அமர்வதும்
கேண்டீனில் அமர்வதும்
தான் மிக மிக அதிகம்
நம் வகுப்பறையின்
வாசத்தை விட !!!!!

கட்டடிப்பதும்
கடற்கரைக்கு செல்வதும்
திரையரங்கு செல்வதும்
கட்டி உருண்டு
சண்டை பிடிப்பதும்

அடுத்த நொடியே
கட்டிப்பிடித்து
அன்பை பொழிவதும்
இங்கு மட்டுமே
நடக்கும் புரியாத புதிர்!!

பிறந்த நாள்
கொண்டாட்டம்
அன்பளிப்பு .....
என மறக்கமுடியாத
இனிய நினைவுகளை
அள்ளித்தரும் இடம்..

ஓர் ஆண்டு படிப்பை
ஒரு நாளில் படித்து
தேர்வு எழுதி
அழகாக நாம்
வெற்றி பெறும் இடம்...

உலகத்தை நாம் பார்க்க
உலகமே நம்மை திரும்பி
பார்க்க வைத்த இடம் ....

இதுவே என் பசுமை மாறா
என் இனிய கல்லூரி ...

மேலே உள்ள அனைத்தும் கற்பனையே ..

என் வாழ்க்கைக்கும் இதற்கும்  90% தொடர்பு கிடையாது ....

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்