என்
சின்னஞ்சிறு
இதயம் கூட
ஏனோ
மலை அளவு
கனக்கின்றது...
நீ என்னை
விட்டு
விலகி விலகி
செல்வதால்
அல்ல.....
என் காதலை
தவிக்க
விட்டு செல்வதால்..
நமக்காக நம் மணம்
சுமந்த காதலை
நீ தூக்கி எரிந்து
என்னையும்
தூக்கி எரிந்தாய்
நம் காதலுக்காக
நான் சுமக்கும்
நம் சிசுவை
நான் சுமக்கிறேன்
இன்று
நம் காதல் பரிசாக....
சுமப்பேன் இறுதிவரை
என் உயிரின் உயிராக...
இறுதி மூச்சு உள்ள வரை
நம் காதல் நினைவாக
என் உறவாக ....
என் கனவிலும் நீயே
என் நினைவிலும் நீயே
என் உயிரிலும் நீயே
என் உணர்விலும் நீயே
என் காதலும் நீயே
என் காதலனும் நீயே
என் இதயக்கூட்டில்
காதலை
விதைத்தவன் நீயே
ஒரு காவியமாய்
அழகு ஓவியமாய்
என் உள் நுழைந்தவன் நீயே
நீயே நீயே
இனி
எல்லாம் நீயே....
நித்தம் நித்தம் உன்னை
நினைத்து நினைத்து
என் நித்திரை அறையில்
துயில் கொள்வதால்
என் நித்திரையின்
நீளம் குறுகி குறுகி
என் இனிய இரவு
நீள்கிறது
உன் நினைவுடனே.
உன் அருகாமை
இல்லாத போது தான்
முழுவதுமாக
உணர்கிறேன்...
உன் பாசமும்
நம் நேசமும்
நமது அன்பின் ஆழமும் ....
போராடி போராடி தோற்பதில்லை
வாழ்க்கை
நமது போராட்டத்திற்கான களமே
வாழ்க்கை...
துகள் அளவு மகிழ்ச்சியை
மலையளவும்
மலையளவு கஷ்டத்தை
துகள் அளவும்
எடுத்துக்கொள்ள மனம்
இருந்தால் உன் வாழ்க்கை
இனிமையானதே ....