வியாழன், 30 ஏப்ரல், 2015

உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்


உழைப்பாளர்கள் இல்லை
என்றால் உலகமே இல்லை
உலகின் ஒவ்வொரு துரும்பும்
உங்களால் மட்டுமே
அசைக்கப்படுகின்றது
ஏன் உருவாக்கப்படுகின்றது...

உங்களின் வியர்வை சிந்த
உடலை ஓடாக தேய்த்து
ஓய்வின்றி உழைத்து
உலகை முன்னேற்றும்

நீங்கள் இல்லை என்றால்
இந்த உலகமும் இல்லை
வாழ்க்கையும் இல்லை
இந்த நன்னாளாம் 

உங்கள் பொன்னாளில்

உழைத்து உழைத்து ஓடாக
தேய்ந்த ஒவ்வொரு வீட்டின்
முதுகெலும்பான தந்தைகளுக்கும்
எல்லா நொடியும் எறும்பு போல்
உழைத்துக் கொண்டிருக்கும்
அன்பு தாய்மார்களுக்கும்

குடும்பத்தை தன் தோலில்
சுமக்கும் அண்ணாக்களுக்கும்
அண்ணன் இல்லாத வீட்டில்
அண்ணாவாக உழைக்கும்
அன்பான அக்காக்களுக்கும்

செல்ல குட்டி சின்ன தம்பி
செல்ல தங்கைகளுக்கும்
உலக நண்பர்கள் அனைவருக்கும்
என் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

உறவுகளை வரிசை படுத்தலாம்
ஆனால் உழைப்பாளர்களை
வரிசை படுத்த முடியாது ...

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் ....

என்றும் அன்புடன்
பொற்செல்வி.....

Happy Birthday Thala



அமராவதி அர்ஜூன் முதல் 
என்னை அறிந்தால் 
சத்யதேவ் வரை 
எத்தனை எத்தனை 
முகங்கள் உனக்கு
மாற்றங்கள் உன் 
நடிப்பில் மட்டுமே இருந்து
என்றென்றும் மாறாதது 
உன் அன்பு உள்ளம்...

காதல் மன்னன் உள்ளம் கவர் காதலனாக
பூவெல்லாம் உன் வாசம் நண்பனாக 
என்னை அறிந்தால் அப்பாவாக
தீனா அண்ணனாக
முகவரி தம்பியாக 

உன்னை கொடு என்னை தருவேன் army man ஆக
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் director ஆக
அவள் வருவாளா முற்போக்கு சிந்தனையாளனாக
சிட்டிசன் புரட்சியாலனாக
உன் அட்டகாசமான நடிப்பால் எங்களை கவர்ந்து

ராசி மைனர் மாப்பிள்ளை
Stylish பில்லாவாக
மங்காத்தா வில்லனாக
தமிழ் சினிமாவை அமர்க்களப்படுத்தி

பரமசிவன் திருப்பதி ஆஞ்சநேயா ஜனா ஜீ ஆழ்வார் என பகைவனுக்கு அருள்பவராக

ரெட்டை ஜடை வயசில் கல்லூரி வாசல் பவித்ரா வான்மதி உல்லாசம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்னை தாலாட்ட வருவாளா வாலி ரெட் உயிரோடு உயிராக என்று மாபெரும்  காதல் கோட்டை கட்டி

நேசம் உடன் ஆசை ஆக உன்னை தேடி வரும் ரசிகர்ககளின் பாசமலர்கள் ஆக ஆனந்த பூங்காற்றே நீ வருவாய் என ராஜாவின் பார்வையிலே ஆரம்பம் முதல் வரவேற்று உபசரித்து தொடரும் நம் உறவு என்று அசல் தலைவனாகவும்

வரலாறு போற்றும் ஏகன் ராஜா வாக கிரீடம் சூட்டி வீரம் உடன் எங்கள் மனதில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கும்  நீ பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வாழ வாழ்த்துக்கள் ....

என்றும் அன்புடன் 
பொற்செல்வி மதிவாணன்​

Happy Birthday Thala



புதன், 29 ஏப்ரல், 2015

காதல்


நீ எங்கோ இருக்க
நான் எங்கோ இருக்க
சிக்கித் தவிக்கின்றது
காதல் நினைவுகளில்
நம் நிறைவேறா காதல்
நமக்கிடையில்
என்றென்றும்
கண்ணீருடன்.....

என்றும் அன்புடன்
அ.பொற்செல்வி மதிவாணன்

திங்கள், 27 ஏப்ரல், 2015

என் அழகு நிலவு பெண்ணே...



எனக்கும் கொஞ்சம்
தலைக்கணம் தான்
நிலைக்கண்ணாடி
முன் நிற்கும் போது
நான் தான்
பேரழகி என்று!!!
உன்னை பார்த்து
தலை கவிழ்ந்தேன்
உன் அருகில்
நிற்க கூட தகுதி
எனக்கில்லை என்று
என் அழகு நிலவு பெண்ணே...

என்றும் அன்புடன்
அ.பொற்செல்வி மதிவாணன்

நிலவு பெண்



பகலவன் வரவால்
பகலில் ஓய்வு
இரவின் மடியில்
பளிச்சிடும்
பளிங்கு போன்ற
நிலவு பெண்ணுக்கு!!!

அந்திமாலை
நிலவின் வரவால்
இரவில் ஓய்வு
சுட்டெரிக்கும்
சூரியனுக்கு ....

என்றும் அன்புடன்
பொற்செல்வி......

சனி, 25 ஏப்ரல், 2015

மாற்றுத்திறனாளிகள்


மாற்றுத்திறன்
அல்ல
மொத்தத்திறன்
கொண்டவர்கள்
இவர்களே....

எல்லாம் சரியாக
இருந்தும் உழைப்பை
விட்டு விட்டு பசிக்காக
யாசித்து உயிர் வாழும்
நடை பிணங்களுக்கு
மத்தியில் !!

தம் தனித் திறமையை
மட்டும் மேம்படுத்தி
அதை மூலதனமாக
வைத்து உழைத்து
வாழும் வர்க்கம்

கண்கள் கூட காதுகளாகவும்
காதுகள் கூட கண்களாகவும்
பேச்சு கூட சைகைகளாகவும்
கைகள் கூட கால்களாகவும்
கால்கள் கூட கைகளாகவும்
மாறித்தான் போனது....

தன்னம்பிக்கை
தைரியம்
துணிவு
உழைப்பு
உண்மை
என்ற ஐம்புலன்களை
நம்பி வாழ்பவர்கள்....

நம் பரிதாபமும் பச்சாதாபமும்
தேவையில்லை அவர்களுக்கு..
அவர்களுக்காக இரக்கப்பட்டு
பேசாமல் ஒரு முழுமனிதனாக
நினைத்து அன்புடன் பேசுங்கள்

வாழ்த்துக்கள்
வாழவிடுங்கள் ...