வர்ணங்களும் தோற்றுவிடும் வானவில்லும் நிமிர்ந்து பார்க்கும் விண்மீன்கள் கண் அடிக்கும் வீசும் தென்றல் மெய் சிலிர்க்கும் உலகம் கூட சுழல மறக்கும் வான் நிலா வெட்கப்படும் என்னவள் சிரிக்கையிலே!!!
மனிதர்கள் மண்ணில் பிறக்கிறார்கள் வாழ்ந்த பிறகு இறக்கிறார்கள்!!! இறந்தும் சிலர் வாழ்கின்றார்கள்.. நீங்களும் வாழ வேண்டுமா? செய்வீர் தானம்... வாழும் போது இரத்த தானம்.. வாழ்க்கைக்குப் பிறகு கண் தானம்...
இறுதிவரை உறுதியாக காதலிக்க நினைப்பவர்கள் மட்டும் காதலியுங்கள்!! திருமணத்திற்கு முன்போ, திருமணம் முடிந்தவுடனோ அல்லது இரண்டு மூன்று ஆண்டுகள் கடந்த பிறகோ உங்கள் காதல் காணாமல் போகும் என நினைப்பவர்களே நீங்கள் செய்வது காதலே அல்ல !!!
கனவு காண கண்கள் உண்டு கற்பனை திறனும் உண்டு கல்வி மீது காதலுண்டு கடன் வாங்கி வாங்கி கட்டிய காசு, காலம் முழுக்க வட்டி கட்டி கட்டி கடனடைக்க இயலாமல் அடிமையானான் பட்டதாரி...