உன் விழி பார்க்கவில்லை
உன் முகம் பார்க்கவில்லை
உன் நிறம் பார்க்கவில்லை
உன் உரு பார்க்கவில்லை
உன் எழுத்துக்களை பார்த்தேன்
உன் குணத்தை அறிந்தேன்
உன் இனிய குரலை கேட்டேன்
உன் மொழியை ரசித்தேன்
உன் அன்பு மழையில் நனைந்து
உன் மன காதலை அறிந்து
என் மன காதலை உணர்ந்து
நம் காதலால் இணைந்து
அன்பினை உணர்ந்து
வாழ்கின்றோம் நம் காதலுடனே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக