வியாழன், 18 ஜூன், 2015

என் செல்ல மனைவி.





காலை கதிரவனுக்கு 
போட்டியாய் 
கண்விழித்து நீ எழுந்து .........
வாசலில் அழகு கோலமிட்டு
விரைவாக காலை பணி முடித்து
என்னை எழுப்பி என் தேவை அறிந்து
பணிவிடை செய்து அனுப்பி வைப்பாய்

பணி நிமிர்த்தம் பல இடம் சென்றாலும்
கையில் உணவுடனே அனுப்பி வைப்பாய்
என்னை அன்புடனே காதலுடன்

மணிக்கொருமுறை எனக்கு உன் நினைப்பு
உனக்கோ நாள் முழுதும் என் துடிப்பு

பணி பல முடித்து கலைப்புடன்
நம் மனை திரும்ப
என் வரவை எதிர்பார்த்து
உண்ணாமல் உறங்காமல்
வழிமேல் விழிவைத்து வீற்றிருக்க
உன் விழி பார்த்த உடன்

என் பணி சுமையும்
என் கலைப்பும்
என்னை விட்டு நீங்கி ஓடுமே
என் செல்ல மனைவி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக