வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பிரிந்தேன் உன்னை உனக்காக



தென்றலும் தீயாக சுடுகிறது
தேகமும் தீயாக எரிகிறது

வரவை எதிர் நோக்கிய என்
விழிகளில் வழிகிறது கண்ணீர்

கைபிடி அளவு அழகு இதயம்
கனமாக கனக்கிறது உன்னால்!!

கல்லாக மனம் மாற விழைகிறது
கண்கள் கலங்காமல் இருக்க....

வேதனையை வீசி சென்றாய்
வலிகளை கொடுத்து விட்டாய்

வேதனையும் சோதனையும்
விம்மலும் விசும்பலும் வலிகளாக

நொடிகள் தோறும் நினைக்கிறேன்
நிமிடங்கள் தோறும் தவிக்கிறேன்

விருப்பம் இல்லாத அழையா
விருந்தாளியாக நான்?????

அறிந்தேன் வியந்தேன்
உடன் பிரிந்தேன் உன்னை
உனக்காக......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக