வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சீமந்தம்



திருமாங்கல்யம்
கழுத்தில் ஏறி
ஆணும் பெண்ணும்
அன்பால் இணைந்த
அன்பின் பரிசான
குடும்ப வாரிசாக
பிறக்கப்போகும்
மழலையை மகிழ்விக்க

மழலையை முதல் முதலாக
பெற்றெடுக்கும் தாயவளுக்குத்
தைரியமும் மகிழ்ச்சியும்
அள்ளித் தந்து துணிவூட்டி
அம்மி மிதித்து அருந்ததி பார்த்த
மகிழ்ச்சியை நினைவூட்டி

அழகான பச்சைப் பட்டு உடுத்தி
அழகு ஜடை பின்னல் வைத்து
கை நிறைய குலுங்கும்
வளையல் அணிவித்து
அழகாக நலங்கு வைத்து

பழங்களும் பலகாரங்களும்
வரிசையாக வைத்து
முதுநீர் குத்தி அட்சதைத் தூவி
பெரியவர்கள் ஆசிர்வதிக்க
கருவில் இருக்கும் குழந்தை
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து
உலகைக் காண ஓடி வரும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக