புதன், 20 மே, 2015

மே 18


தமிழன் நான் தமிழன்
என்று மார்தட்டிக்
கொண்டால் போதாது
உணர்வு வேண்டும்
பாசம் வேண்டும் ...

என் அப்பாவி தமிழர் பலர்
படுகொலை செய்யப்பட்ட
போதும் போரில் வீர மரணம்
அடைந்த போதும் ஏற்பட்ட
வலியும் காயமும் என்றும்
என் நெஞ்சை விட்டு
நீங்காது நிற்கின்றது....

அவர்கள் அனைவரும்
என் தோழரே...
ஒவ்வொரு இலங்கை
தமிழனும் என் உறவே...
என் உடன் பிறப்பே....

இன்றும் எனக்கு பாசம் 
அதிகம் தான் என் இலங்கை
உறவுகளுடன் ...
அவர்கள் வலி என் வலியே..
நானும் உணர்கிறேன்
அந்த வலியை இன்று வரை
உணர்வேன் இந்த வலியை
என் வாழ்நாள் முடியும் வரை ...

இந்த நாள் நான் பிரிந்த என்
சொந்தங்களையும் அவர்கள்
உறவுகளையும் நினைத்து பார்த்து
அவர்களுக்காக இறைவனை
வேண்டிக்கொள்கின்றேன்
கண்ணீர் உடன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக