ஞாயிறு, 17 மே, 2015

காதலன்



நீராகி என்னை
அடித்து சென்றவனே

நிலமாகி என்னை
உன் இதயத்தில்
புதைத்தவனே

தென்றலாகி என்னை
மெதுவாக வருடியவனே

வானாகி என்னை உன்
பக்கம் வலைத்தவனே

தீயான உன் காதலால்
என் தனிமையை
சுட்டெரித்தவனே

இனி நீ இன்றி
நான் இல்லை....
உன் நினைப்பின்றி
என் வாழ்வும் இல்லை...

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக