சனி, 9 மே, 2015

பாதுகாப்பான வாழ்க்கை



வணக்கம் என் இனிய சகோ....

இப்பதிவை நான் இரண்டு நாட்களுக்கு முன்பு போட வேண்டி பதிவு ....

நான் கோவில் சென்ற போது என் உள் ஏற்பட்ட பாதிப்பு ....மகிழ்ச்சி ஆக இருந்தேன் சாமி தரிசனம் முடித்து ...ஒரு ஐந்து நிமிடங்கள் முன்னதாக நான் கோவிலை விட்டு கிளம்பி இருந்தால் நிச்சயமாக இந்த அவலம் என் கண்களில் பட்டு என் உள் பேர் இடியை இறக்கி இருக்காது .

தமிழக அரசின் அன்னதான திட்டத்தை நான் இது வரை சந்தோஷமாக வரவேற்தில்லை. காரணம் உழைக்கும் சிலரையும் சோம்பேறி ஆக்குகிறது என்ற எண்ணம்.அன்று நான் கண்ட காட்சி 100 பேர் என் கண் முன் மாண்டு போன வலியை கொடுத்தது.

அன்னதானம் தொடங்கும் நேரத்தில் மக்கள் தடுப்புகளை தாண்டி ஏரி வரிசையில் நிற்க தொடங்கினார்கள்.அப்போது ஒரு தாய் ....85 வயதுக்கு மேல் இருக்கும் ...

உடல் தளர்ந்து ...நடை தளர்ந்து ...வயதின் முதிர்ச்சி உடலின் கோடுகளாய்....உடல் நடுங்குகின்றது அந்த தாய்க்கு ...நடக்கவும் முடியாமல் அந்த வரிசையில் வந்து நின்றார் ...அந்த கொடிய தருணத்தை காணும் அவஸ்தை இனி என் வாழ்க்கையில் மீண்டும் ஏற்படக்கூடாது ....அய்யகோ நான் துடித்து விட்டேன் ....அந்த நிமிடம் என்னால் என் கண்கள் & இதயத்தில் வழிந்ததை நீரை கட்டுபடுத்த முடியவில்லை .

குடும்பம் கைவிட்ட நிலையில் தனியாக இருக்கும் இது போன்ற வயதானவர்ககளுக்கு அரசு இருப்பிடம் அமைத்து கொடுத்து உணவு கொடுத்து அவர்களை பாதுகாப்பான வாழ்க்கை வாழ வைக்க வழி செய்தால் நன்றாக இருக்கும்.அது போல இருப்பிடங்களை மக்கள் எளிதாக அறிந்து கொண்டு தான் பார்க்கும் ஆதரவற்றோரை அந்த இடங்களில் கொண்டு சேர்த்தால் மட்டுமே இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக