ஞாயிறு, 3 மே, 2015

மழை


சுட்டெரிக்கும் சூரியனே
கொஞ்சம் கருணை காட்டு
சில்லென்ற மழைத்துளியே
கொஞ்சம் கருணை காட்டு!!

கொடிய வெப்பம் தவிர்க்க
பூமி அன்னை மடி குளிர
செடி கொடிகள் தழைக்க
பலன் பல தரும் மரங்கள் சிரிக்க

உயிர்களின் தாகம் தீர்க்கும்
ஏரி குளம் ஆறுகள் நிரைய
வறட்சி போக்கி வளம் கொடுக்க
விவசாயிகளின் துயர் போக்க

ஆங்காங்கே மிதமானது
முதல் பலத்த மழை பெய்து
மக்கள் முதல் மாக்கள் வரை
உலகின் அனைத்து உயிர்களின்

மனங்கள் குளிர்ந்து உன்னை
வாழ்த்த ஓடோடி வந்துவிடு
விண்ணை விட்டு மண்ணுக்கு
என் செல்ல மழையே!!!

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக