சனி, 5 செப்டம்பர், 2015

திகட்டாமல் கதை சொன்னாய்


திகட்டாமல் கதை சொன்னாய்
தினம் தினம் அழகாக சொன்னாய்

கற்பனையில் பல சொன்னாய்
கருத்தாகவே நீ சொன்னாய்

மனதை கவர நீ சொன்னாய்
மகிழ்விக்கவே சொன்னாய்

ஒரு நாள் நம் பிரிவுக்கும்
ஒரு கதை சொன்னாய்

என்னை பிரிந்து விட்டாய்
எங்கோ பறந்து விட்டாய்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக