சனி, 5 செப்டம்பர், 2015

மணக்கும் மல்லி

மணக்கும் மல்லியாக
நான் மலர வேண்டும்

நீ வளர்க்கும் செடியில்
நான் மலராக வேண்டும்

எனக்கு நீர் ஊற்றி நீ
உயிர் ஊட்ட வேண்டும்

என் அருகில் அனுதினமும்
நீ நெருங்கி வர வேண்டும்

வாசனை வீசி உன்னை
ஈர்த்து மயக்க வேண்டும்

காற்றில் கலந்து உன்னை
நான் நெருங்க வேண்டும்

சுவாசித்து என்னை நீ
மனம் மகிழ வேண்டும்...

மூச்சாக உன்னுடன் கலந்து
மெய் சிலிர்க்க வேண்டும்!!!

உயிர் மூச்சாக உன் உள்ளே
என்றும் நிலைக்க வேண்டும்

உனக்காக மீண்டும் மீண்டும்
இப்புவியில் மலர வேண்டும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக