திங்கள், 6 ஜூலை, 2015

உயிர்



மரிக்கின்ற எண்ணம் எனக்கில்லை இன்று
மரிக்கின்ற தருணம் வரும் வேலை உண்டு
நான் மடி சாய வேண்டும் உன் மடி மீது அன்று

என் துடிக்கின்ற இதயம் உன் மடி மீது போக
உயிர் பிரியும் முன்னே உன் முகம் காண வேண்டும்
விழி மூடும் முன்னே உன் விழி காண வேண்டும்

கேட்கின்ற குரல்கள் உனதாக வேண்டும்
மொழிகின்ற வார்த்தை உன் பெயராக வேண்டும்
விடுகின்ற மூச்சும் உன் நினைவாக வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக