புதன், 29 ஜூலை, 2015

உறக்கம்



உறக்கம் இன்றி தவிக்கின்றேன்
உறங்கத் தானே விழைகிறேன்

உடலும் சோர்ந்து விட்டது
உளமும் சோர்ந்து விட்டது

உணரவில்லை என் மனம்
உறங்க விடவில்லையே

உலகம் உறங்கி விட்டது
உறவும் உறங்கி விட்டது

உயிரும் கூட உறக்கத்aதை
உடைமையாக்க துடிக்கிறது

உலகை மறக்க நினைக்கிறேன்
உன் நினைவு தானே வாட்டுது

உறக்கம் இன்றி தவிக்கின்றேன்
உறவாய் உன்னை நினைக்கிறேன்

உறங்க வரம் தர வேண்டி வேண்டி
உன்னை நான் யாசிக்கின்றேன்

உன்னை மட்டும் தானே நேசிக்கிறேன்
உண்மையில் உன்னை சுவாசிக்கிறேன்

உணர வேண்டும் இதை நீ மனமார
உன் உறவாக வேண்டும் நான் உளமார

உடன் என் மனமம் உறங்குமே
உன் நினைவுடன் உருகிடுமே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக