கடலா கடல் அலையா
என என்னை வியக்க வைத்த
என் சின்னஞ்சிறு கிராமத்து
கடைவீதியில் பெருங்கூட்டம்
பூக்கடையில் பெருங்கூட்டம்
பழக்கடையில் பெருங்கூட்டம்
பலசரக்கு கடையிலும் பெருங்கூட்டம்
ஏனோ எப்பொழுதும் கூட்டத்தை
வெறுக்கும் என் மனம்
இன்றோ மிக மிக
மகிழ்ச்சியாக உணர்கிறது
ஆம் என் தமிழும் தமிழினமும்
இன்னும் பல நூறு கோடி
ஆண்டுகள் வாழும் என்று....
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....
என்றும் அன்புடன்
அ.பொற்செல்வி மதிவாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக