உலகெங்கும் தேடி தேடி
கண்டேன் உன் அழகிய
இரு காந்த விழிகளை
கூர்மையான ஆயுதமாக
என்னை தொலைக்கிறது
இன்றும் உன் இரு கண்கள்
காதல் கொண்டேன்
அதன் ஈர்ப்பு விசையில்
பறிகொடுத்தேன்
என் மனதை
பின்பு தான் நான்
உணர்தேன் உன்
அழகிய விழிகளுக்கு
ஒளியை உணரும்
சக்தி இல்லை என்று
நான் உன் இரண்டு
கண்களுக்கு ஒளியாக
இருக்க விழைகிறேன்
ஒவ்வொரு நொடியும்
நம் வாழ்க்கை முழுதும்
ஏற்றுக்கொள்வாயா
என்னை உன் விழியாக......
என்றும் அன்புடன்
அ.பொற்செல்வி மதிவாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக