திங்கள், 13 ஏப்ரல், 2015

கடற்கரை


அழகில் உனக்கு நிகர் இல்லையடி
உன் நீல நிறமும் அதன் அழகும்
என் இரு விழிகள் போதாது
அதை நான் ரசிக்க

தூரத்தில் அமைதி
அருகில் ஆக்ரோசம்
பொங்கிவரும் வெண் நுரை
என அழகாக நீ இருக்க

நீ என்னை தொட்டு தொட்டு
முத்தமிட்டுப் போவதும்
நான் உன்னை அள்ளி அள்ளி
முத்தமிட நினைப்பதும்

என்னவன் கைபிடித்து
நான் உன்னிள் நடப்பதும்
எம்மிருவர் கால் தடங்களை
நீ கலைத்து விட்டு போவதும்

உன் மண்ணில் என் பெயரெழுத
அதை நீ அலைப்பதும்
ஒவ்வொரு முறையும்
உன்னை நான் சந்திக்கும்
போது நடக்கும் வாடிக்கைதான்
ஆனாலும் அதன் சுவாரசியம் மட்டும்
இன்றும் குறையவே இல்லை
பல நூறு முறை நடந்தாலும்

என் உயிர்தோழனாய்
உன்னுடன் நான்
உரையாடிய நிமிடங்கள்
தனிமையில் உன் உடன்
நான் பேசி பேசி
பல அடி முன் வைக்க
உன் ஆக்ரோசத்தால்
நீச்சல் தெரியாதடி உனக்கு
என நீ நினைவுருத்த
உடன் நான் பின்வாங்க

எனக்கும் ஆசை தான்
உன்னுடன் முழுதும் உறவாட
நான் உன்னை நெருங்கும் போது
என் பெண்மையின் வெட்கம்
என்னை தடுத்து நிறுத்த

உன்னை விட்டு பிரிய மனமின்றி
திரும்ப திரும்ப திரும்பி
பார்த்து அடி மேல் அடி
வைத்து நான் நடக்க

உனக்காக நான் காத்திருப்பேன்
என நீ என்னை வழி அனுப்ப
விடைபெற்றேன் உன்னிடம்
வெகு விரைவில் உன்னை
மீண்டும் சந்திப்பேன்
என்ற நம்பிக்கையில்....

என்றும் அன்புடன்
அ.பொற்செல்வி மதிவாணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக