சனி, 25 ஏப்ரல், 2015

மாற்றுத்திறனாளிகள்


மாற்றுத்திறன்
அல்ல
மொத்தத்திறன்
கொண்டவர்கள்
இவர்களே....

எல்லாம் சரியாக
இருந்தும் உழைப்பை
விட்டு விட்டு பசிக்காக
யாசித்து உயிர் வாழும்
நடை பிணங்களுக்கு
மத்தியில் !!

தம் தனித் திறமையை
மட்டும் மேம்படுத்தி
அதை மூலதனமாக
வைத்து உழைத்து
வாழும் வர்க்கம்

கண்கள் கூட காதுகளாகவும்
காதுகள் கூட கண்களாகவும்
பேச்சு கூட சைகைகளாகவும்
கைகள் கூட கால்களாகவும்
கால்கள் கூட கைகளாகவும்
மாறித்தான் போனது....

தன்னம்பிக்கை
தைரியம்
துணிவு
உழைப்பு
உண்மை
என்ற ஐம்புலன்களை
நம்பி வாழ்பவர்கள்....

நம் பரிதாபமும் பச்சாதாபமும்
தேவையில்லை அவர்களுக்கு..
அவர்களுக்காக இரக்கப்பட்டு
பேசாமல் ஒரு முழுமனிதனாக
நினைத்து அன்புடன் பேசுங்கள்

வாழ்த்துக்கள்
வாழவிடுங்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக