குழந்தைகளின் அழுகுரல் ஒலி
ஐயகோ கேட்க முடியவில்லை
ஓலங்களாக ஒலிக்கிறது
என் இரு காதுகளில்
வலியால் துடிக்கிறது உள்ளம்
கண்களில் கண்ணீர் துளிகள்
பதற்றம் தொற்றிக்கொண்டு
பிதற்றுகிறது மனது
ஏனோ தெரியவில்லை
மனம் முழுக்க முழக்க
பயமும் பதற்றமும்
படுத்துகிறது என்னை
காதுகள் கேட்கும் திரனை
இழந்துவிட கூடாதா
என முதல் முறையாக
ஏங்குகிறது என் உள்ளம்
ஆம் முதல் நாள் இன்று
ஆம் குழந்தைகளின்
கல்வி தொடங்கும்
முதல் நாள் இன்று .....
பொற்செல்வி மதிவாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக